Call 'N' Order 0044(0)2087547777
    • 0 Products

    • # of item: 0

    • Total : £: 0.00

    • View

அ.கா.பெருமாள்-A.S.Perumal

நாகர்கோவிலில் வசித்து வரும் à®….கா.பெருமாள் அவர்களின் இயற்பெயர் à®….காக்கும் பெருமாள் நாட்டாரியல் அறிஞர், வரலாற்றாசிரியர். குமரிமாவட்டத்தை விரிவான வரலாற்றாய்வுக்கு இலக்காக்கிய ஆய்வாளர். தமிழிலக்கியம் முதுகலைப்பட்டம் பெற்றபின் மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் நாட்டாரியலில் “நாஞ்சில் நாட்டு வில்லுப்பாட்டுகள்” எனும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். அப்போது இவருடன் ஆய்வுத்தோழராக விளங்கியவர் உலகப்புகழ்பெற்ற நாட்டாரியலாளரான ஸ்டுவர்ட் பிளாக்பர்ன் இருந்தார். ஆரல்வாய்மொழி அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். நாட்டாரியலிலும் இலக்கியத்திலும் இவரை ஈடுபட வைத்தவர் வெங்கட் சாமிநாதன். வெங்கட் சாமிநாதன் நடத்திய யாத்ரா இதழை நீண்டகாலம் இவர் வெளியிட்டு வந்தார்.

 

Related List

Popular Products

Top Links